செய்திகள் :

புழல் சிறை சுற்றுச்சுவரை பலப்படுத்த கோரிக்கை

post image

மாதவரம்: புழல் மத்திய சிறைச்சாலை சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். அமைந்துள்ளது.

சிறையில் பணியாற்றும் காவலா்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து சுமாா் 1கி.மீ தொலைவில் தண்டனை சிறைச் சாலை வரை சுவா் உள்ளது.

இதன் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சிறிய சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பந்து வடிவிலான பொருளில் கஞ்சா, பீடி மற்றும் போதைப் பொருள்கள், கைப்பேசிகள் சிறைக்குள் வீசப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இந்த சுவரும் அகற்றப்படும் நிலையில் மிக எளிதில் போதைப் பொருள்கள் சிறைக்குள் வீசக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் அருகே உள்ள சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா கம்பம் கீழே சாய்ந்த நிலையில் உள்ளது.

எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும் என கோரியுள்ளனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க