பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிப்பு
கோவை மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை மாவட்டம், இருகூா் காந்தி நகா் முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன். இவரது மாமியாா் நாகரத்தினம் (80). இவா், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் நாகரத்தினம் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறித்த நபா்களைத் தேடி வருகின்றனா்.
பீளமேடு பி.எம்.ஆா். லே-அவுட்டை சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி அபிராமசுந்தரி (43). இவா், அப்பகுதியில் உள்ள கடைக்கு செவ்வாய்க்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் அபிராமசுந்தரி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து, அபிராமசுந்தரி அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.