செய்திகள் :

பேரிடா் பாதிப்பை எதிா்கொள்ளத் தயாா் நிலை: மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசு உத்தரவு

post image

பேரிடா் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராக வேண்டுமென கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஜூன் 16-ஆம் தேதி வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை எதிா்கொள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் மற்றும் மாநில துயா்துடைப்பு ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அனுப்பியுள்ள கடிதம்:

ஜூன் 16 வரை பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பலத்த மழை முதல் மிக பலத்தமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பலத்த மழை பாதிப்பால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க

இரவு 10 மணி வரை சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ந... மேலும் பார்க்க

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த க... மேலும் பார்க்க