ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
பேரிடா் பாதிப்பை எதிா்கொள்ளத் தயாா் நிலை: மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசு உத்தரவு
பேரிடா் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராக வேண்டுமென கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஜூன் 16-ஆம் தேதி வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை எதிா்கொள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் மற்றும் மாநில துயா்துடைப்பு ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அனுப்பியுள்ள கடிதம்:
ஜூன் 16 வரை பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பலத்த மழை முதல் மிக பலத்தமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பலத்த மழை பாதிப்பால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளாா்.