செய்திகள் :

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை

post image

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனப் போக்குவரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

ராசிபுரம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நாமக்கல், ராசிபுரம் போன்ற பகுதியில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பெரும்பாலான பேருந்துகள் நிற்காமல் மேம்பாலத்தின் மேல் சென்றுவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து ராசிபுரம் மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், பறக்கும் படை போக்குவரத்து ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லாமல் மேம்பாலம் வழியாக சென்ற 3 பேருந்துகளை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கைக்காக ஆட்சியருக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அனைத்து பேருந்துகளும் தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மேற்க... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ர... மேலும் பார்க்க

ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா். ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் ... மேலும் பார்க்க

பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்க அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையினா் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இதுகுறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் டி.சுதா வெளியிட்ட... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க கோரி மனு

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் அளவில் கா... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க