செய்திகள் :

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?பேரவையில் அமைச்சா் சிவசங்கா் பதில்

post image

போக்குவரத்துப் பணியாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியதாவது:

விடியல் பயணம் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில், இதன் மூலம் 675.98 லட்சம் பெண்கள் பயணித்துள்ளனா்.

இந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் ரூ.1,200 சேமிப்பதாக தனியாா் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. உலகவங்கி நிதியுதவியுடன் சென்னை மாநகரில் 625 பேருந்துகள் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நிகழாண்டு 3,000 புதிய பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டு ஒப்பந்த நிலையில் உள்ளது.

மொத்தம் 3,778 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 8,129 பேருந்துகள் வரவுள்ளன.

இரு உரிமம் தேவை: பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதை இயக்குவதற்கான பணியாளா்களையும் தோ்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் நபா்கள் ஓட்டுநா் - நடத்துநா் என இரண்டு உரிமங்களும் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளா் பற்றாக்குறை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைத்துப் பேருந்துகளும் இயக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஊதிய உயா்வு: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை 3 ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டிய நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகள் கடந்தும் முடிக்கப்படவில்லை. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இருகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை சட்டப்பேரவை கூட்டத் தொடா் முடிவுற்றப்பிறகு நடத்தப்பட்டு தொழிலாளா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். மினி பேருந்து திட்டம் 2024-க்கு பின்பு 1,842 போ் புதிதாக மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பித்துள்ளனா். அடுத்த மாதம் இந்த பேருந்துகளை முதல்வா் தொடங்கி வைப்பாா் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

மகளிா் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு! - அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்... மேலும் பார்க்க

தங்கம் விலை 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,380 சரிவு! ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த ... மேலும் பார்க்க

நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடை... மேலும் பார்க்க