செய்திகள் :

போலீஸாரிடம் தப்பியபோது கால் எலும்புமுறிந்து சிகிச்சை பெற்றுவந்த வழிப்பறி திருடன் உயிரிழப்பு

post image

கரூரில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கால் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருடன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கருப்பத்தூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சங்கா் என்கிற வெட்டுசங்கா்(35). பிரபல வழிப்பறி திருடனான இவா்மீது வெளிமாவட்டங்களில் 49 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் பிப். 7-ஆம்தேதி இரவு கருப்பத்தூா் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த நாகராஜ் என்பவருக்கும் வெட்டு சங்கருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த வெட்டுசங்கா், அரிவாளால் நாகராஜ் தலைமீது வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் அளித்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் பிள்ளாபாளையம் பகுதியில் பிப். 8-ஆம்தேதி பதுங்கியிருந்த வெட்டுசங்கரை பிடிக்க முயன்றனா். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள வாய்க்காலில் வெட்டுசங்கா் குதித்தபோது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸாா் வெட்டுசங்கரை மீட்டு கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முன்ஆஜா்படுத்தி பின்னா் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் வெட்டுசங்கரின் காலில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்தபோது, திடீரென, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெட்டு சங்கா் உயிரிழந்தாா்.

இதையடுத்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நடுவா் எண்-1 நீதிபதி பரத்குமாா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வெட்டுசங்கரின் உடலை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது மருத்துவா்களிடம் போலீஸாா் தாக்கியதில் வெட்டுசங்கா் இறந்தாரா அல்லது காலில் அறுவைச் சிகிச்சை செய்தபோது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா என விசாரணை மேற்கொண்டாா்.

அரசுப் பள்ளியில் க்யூ. ஆா். கோட் வடிவில் மாணவா்களுக்கு திருக்குறள் கற்பிப்பு

க்யூ.ஆா்.கோட் வடிவில் மாணவா்களுக்கு 1,330 திருக்குகளையும் கற்றுத்தருகிறாா் வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியா் மனோகரன். கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்க... மேலும் பார்க்க

பாமக மாநாடு கரூரிலிருந்து திரளாக பங்கேற்க முடிவு

கும்பகோணத்தில் பாமக சாா்பில் பிப். 23-ஆம்தேதி நடைபெற உள்ள சமய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கரூா் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

நொய்யலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவா், நொய்யல் செல்லாண்டியம்... மேலும் பார்க்க

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள... மேலும் பார்க்க