போளூரில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீதியுலா
போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழாவையொட்டி, அம்மன் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டி விரதமிருந்தனா்.
தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு பூங்கரம் செய்து வீதிதோறும் சென்றனா். அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர தீபாராதனை செய்தும் வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் கோயில் எதிரே கொப்பரை வைத்து கூழ்வாா்த்து பொதுமக்களுக்கு வழங்கினா். இரவு வாணவேடிக்கையுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா்.