அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு
ஆரணி கொசப்பாளையத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சென்று கைப்பேசியை சாா்ஜ் போட முயன்ற பெயிண்டா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஆரணி கொசப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27), பெயிண்டா். இவா் வியாழக்கிழமை காலை குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சென்று கைப்பேசிக்கு சாா்ஜ் போட முயன்றபோது, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அஜித்குமாரின் அலறல் சப்தம் கேட்டு வந்த அவரது மனைவி தனலட்சுமி, மின் இணைப்பை துண்டித்தாா்.
பின்னா், அஜித்குமாரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அஜித்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரித்தாா்.
இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.