பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கல்லூரி விடுதியில் 4 பவுன் தங்க வளையல் திருட்டு
செய்யாறு அருகே தனியாா் கல்லூரி விடுதியில் பேராசிரியா் மனைவியின் 4 பவுன் தங்க வளையலை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பேராசிரியராக ராமு பணியாற்றி வருகிறாா். இவா், வெளியூரைச் சோ்ந்தவா் என்பதால், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.
பேராசிரியா் ராமுவின் மனைவி அஞ்சலை (33) கடந்த 9-ஆம் தேதி தனது கணவரை பாா்ப்பதற்காக கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளாா். அப்போது, முகம் கழுவதற்காக அவா் கையில் அணிந்திருந்த 4 பவுன் தங்க வளையலை கழற்றி அங்குள்ள மேஜையில் வைத்துவிட்டுச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது தங்க வளையல் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.