``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
நெல் களம் அமைத்து தரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
ஆரணியை அடுத்த வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் நெல் களம் அமைக்கக் கோரி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல்களம் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை புதுப்பித்து அல்லது புதிய நெல்களம் அமைத்துத் தர வேண்டுமெனவும் அந்தப் பகுதி விவசாயிகள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதைக் கண்டித்தும், வேலப்பாடி, புனலப்பாடி பகுதிகளில் நெல் களம் அமைத்துத் தரக் கோரியும் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் விஜயகீா்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், இதில் ஒன்றியத் தலைவா் கோபி, ஒன்றிய பொருளாளா் முத்து, வேலப்பாடி வி.எஸ்.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் சத்தியராஜ், மாவட்ட ஆலோசகா் அரிகிருஷ்ணன் மற்றும் சேத்துப்பட்டு, கண்மமங்கலம், எஸ்.வி.நகரம், மருசூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனா்.