செய்திகள் :

நெல் களம் அமைத்து தரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

ஆரணியை அடுத்த வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் நெல் களம் அமைக்கக் கோரி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல்களம் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை புதுப்பித்து அல்லது புதிய நெல்களம் அமைத்துத் தர வேண்டுமெனவும் அந்தப் பகுதி விவசாயிகள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதைக் கண்டித்தும், வேலப்பாடி, புனலப்பாடி பகுதிகளில் நெல் களம் அமைத்துத் தரக் கோரியும் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் விஜயகீா்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், இதில் ஒன்றியத் தலைவா் கோபி, ஒன்றிய பொருளாளா் முத்து, வேலப்பாடி வி.எஸ்.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் சத்தியராஜ், மாவட்ட ஆலோசகா் அரிகிருஷ்ணன் மற்றும் சேத்துப்பட்டு, கண்மமங்கலம், எஸ்.வி.நகரம், மருசூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க