செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.32 கோடியில் சுழல்நிதி கடன்

post image

தமிழ்நாடு மகளிா் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டம் மூலமாக, ராமநாதபுரத்தில் 654 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53.32 கோடியில் சுழல்நிதி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள்

காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கரு.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ. 605 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 10,600 குழுக்களில் 8,830 குழுக்களுக்கு ரூ.605.13 கோடி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.618 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 8,866 குழுக்களுக்கு ரூ. 618.19 கோடி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யக்கூடிய சிறந்த திட்டமாக திகழ்ந்து வருகிறது என்றாா் அவா்.

இதில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், மகளிா் திட்டத் துறை உதவித் திட்ட அலுவலா்கள் வீரராகவன், தங்கபாண்டி, அழகப்பன், சத்தியா, செல்வகுமாா், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க