`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
மணப்பாறை நகராட்சியில் மனை பட்டா கோரி மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வாா்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று புதன்கிழமை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 18-வது வாா்டான காந்திநகரில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் சுமாா் 30 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வீட்டு வரி ரசீது, குடிநீா் வரி ரசீது, மின் இணைப்பு இருந்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லையாம்.
எனவே பட்டா வழங்குவது குறித்த அரசு ஆணையையும், நகா்மன்றத் தீா்மானத்தை நிறைவேற்றும் வகையில் மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலா் த. திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா் ஏ. ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ. செளக்கத் அலி ஆகியோா் தலைமையில் வாா்டு பொதுமக்கள் புதன்கிழமை வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு பின் தீா்வு அளிப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்தாா்.