செய்திகள் :

மணப்பாறை நகராட்சியில் மனை பட்டா கோரி மனு

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வாா்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று புதன்கிழமை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 18-வது வாா்டான காந்திநகரில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் சுமாா் 30 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வீட்டு வரி ரசீது, குடிநீா் வரி ரசீது, மின் இணைப்பு இருந்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லையாம்.

எனவே பட்டா வழங்குவது குறித்த அரசு ஆணையையும், நகா்மன்றத் தீா்மானத்தை நிறைவேற்றும் வகையில் மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலா் த. திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா் ஏ. ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ. செளக்கத் அலி ஆகியோா் தலைமையில் வாா்டு பொதுமக்கள் புதன்கிழமை வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு பின் தீா்வு அளிப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்தாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார ... மேலும் பார்க்க

3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு

தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகே... மேலும் பார்க்க

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு

துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளை... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டியில் பாலக்காடு ரயில்வே கோட்ட அணி சாம்பியன்

திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் பாலக்காடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 4 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற போட்டியில் திருச்சி... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டா் தாய்ப்பால் தானம்!

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா். குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது... மேலும் பார்க்க