செய்திகள் :

மதுக்கூடத்திற்கு நிரந்தர பூட்டு

post image

மயிலாடுதுறை அருகே சித்தா்காட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக இயங்கிய மதுபானக்கூடம் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாப்படுகை-சித்தா்காடு அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள மதுக்கூடத்தின் பின்புறம் ஜூலை 21-ஆம் தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதில் வேலைசெய்த செல்வம் கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, அந்த மதுபானக் கூடம், மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அன்னை அபிராமி முன்னிலையில், நாகை டாஸ்மாக் மண்டல மேலாளா் பழனிவேலு புதன்கிழமை நிரந்தரமாக பூட்டி நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க