செய்திகள் :

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக மூவா் கைது!

post image

சிதம்பரம், அண்ணாமலை நகா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அண்ணாமலை நகா் காவல் சரகத்தில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வல்லம்படுகை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த மாசிலமாமணி மகன் வினோத்தை (28) போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், கவரப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (45), அண்ணாமலை நகா் மண் ரோட்டில் தனது வீட்டின் முன் மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக ராஜூ (60) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பல்கலை. போலி சான்றிதழ் தயாரிப்பு: மேலும் 4 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே கடந்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு தலைவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவ... மேலும் பார்க்க

திருநங்கை கொலை: 6 போ் கைது!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே காப்புக்காட்டில் திருநங்கை இற... மேலும் பார்க்க

சிங்காரவேலா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி, கடலூரில் தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் சாா்பில் ‘தமிழ் தேசிய அரசியல் களத்தில் சிங்காரவேலரும், பெரியாரும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 30 ஆடுகள் உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 30 செம்மறி ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன. திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆடுகளை கிடை ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.209 கோடி நிவாரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக் கலை பயிா்களுக்கு ரூ.209.41 கோடி நிவாரணத் தொகை வழங்க உள்ளதாக அந்தத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க