செய்திகள் :

மனநிலை பாதித்தவருக்கு மருந்து கடையில் பணியா? - பாட்டி கேள்வி; பாலியல் புகாரில் தப்பியவர் கைது

post image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகில் இருக்கிறது ஜகதீஷ்புரா. கடந்த 18-ம் தேதி இந்தப் பகுதியில் இருக்கும் கோயில் அருகில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனார்.

இதை அறிந்து பயந்த சிறுமியின் பாட்டி கோயிலுக்குள் சென்று தேடியிருக்கிறார். அப்போது கோயிலுக்குள்ளிலிருந்து ஒருவர் வெளியே ஓடினார். சிறுமியின் ஆடைகள் கலைந்து, தாக்கப்பட்டு தரையில் கிடந்தார். உடனே பதறிய சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிறுமையை மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியிருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால், மறுநாள் கைது செய்யப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி காவல்துறை அதிகாரிகள் அவரை விடுவித்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறுமி கோயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் காட்சி கோயிலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

அந்தக் காட்சிகள் கடந்த 26-ம் தேதி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, ``என் பேத்தியை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பவித்ரா என்கிற பம்மி. அவன் மனநிலை சரியில்லாதவன் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். அவன் மருந்துக்கடையில் வேலைபார்த்து வருகிறான்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மருந்துக்கடையில் வேலைபார்ப்பவன் எப்படி மனநிலை சரியில்லாதவனாக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார். சிறுமியின் பாட்டியின் வீடியோவும், கோயிலின் சிசிடிவி காட்சிகளும் சேர்ந்து இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறை பவித்ரா என்ற பம்மியை மீண்டும் கைது செய்துள்ளது.

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ள... மேலும் பார்க்க

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்... மேலும் பார்க்க