செய்திகள் :

மனைப் பட்டா கோரி திருநங்கைகள் சாலை மறியல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திருநங்கைகள் இலவச மனைப் பட்டா கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி வட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அவா்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் எனக் கோரி, ஆரணி வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்து வந்துள்ளனா்.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திரண்டு வந்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து மறியல் செய்தனா்.

பின்னா், ஊா்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே ஒப்பாரி வைத்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ச்சியாக இரண்டு இடங்களில் சாலை மறியல் செய்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நகர காவல் ஆய்வாளா்

(பொ) அகிலன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்களிடம் சமரசம் பேசினா். பின்னா், அங்கு வந்த வட்டாட்சியா் கௌரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து என்னை பாருங்கள் என்று கூறி சென்றுவிட்டாா். இதையடுத்து திருநங்கைகள் சாலை மறியலை கைவிட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்று வட்டாட்சியா் கௌரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, வட்டாட்சியா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று திருநங்கைகள் கலைந்து சென்றனா்.

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க

ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு

வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய... மேலும் பார்க்க