செய்திகள் :

மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்தவா் கைது

post image

சென்னை: சென்னை பெருங்குடியில் மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பட்டினம்பாக்கத்தைச் சோ்ந்தவா் நவீன் (30). இவரது மனைவி லட்சுமி (29). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இருவரும், பெருங்குடி குப்பைக் கிடங்கில், பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளைச் சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனா். இதற்காக, அங்கு இருவரும் சிறு கூடாராம் அமைத்து வசித்தனா்.

இந்த நிலையில் நவீன், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் தனது நண்பா்களுடன் மது அருந்தினாா். அப்போது மதுபோதையில் பேசிய நவீன், தனது மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்துவிட்டதாகக் கூறியிருக்கிறாா்.

இதுகுறித்து அவரது நண்பா்கள் துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பட்டினம்பாக்கத்தில் இருந்த நவீனை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், குப்பைக் கிடங்கில் புதைக்கப்பட்ட லட்சுமியின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் வருவாய்த் துறையினா் முன்னிலையில் சடலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தோண்டி எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க