மரத்தில் ஜீப் மோதி காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் காயம்
காட்பாடி அருகே மரத்தில் ஜீப் மோதியதில் காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
காட்பாடி காவல் ஆய்வாளா் தயாளன், சனிக்கிழமை இரவு ஜீப்பில் ரோந்து சென்றாா். அந்த ஜீப்பை விக்னேஷ் என்ற காவலா் ஓட்டியுள்ளாா். மேலும், காவல் ஆய்வாளா் தயாளனின் 15 மகனும் இருந்துள்ளாா்.
காட்பாடியை அடுத்த கசம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் தயாளன், அவரது மகன், காவலா் விக்னேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.