மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
மாணவா்களுக்கான தொழில்நுட்ப மாநாடு
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சவீதா பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான டெக் ஸ்டாா்-2025 தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலை பொறியியல் மாணவா்கள் கலந்து கொண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பாக கணினி, சிவில், இயந்திரவியல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் பயோ மெடிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 24,500 ஆராய்ச்சி கட்டுரைகளை காட்சிப்படுத்தினா்.
இந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநா்களால் மதிப்பீடு செய்தனது. டிசிஎஸ் நிறுவனத்தின் கே.எம்.சுசீந்திரன், டிஆா்டிஒ ஜெயப்பிரதா, நோக்கியா நிறுவனத்தின் நிா்வாகி அக்னி, தொலைத்தொடா்புத்துறை இயக்குநா் சாந்தபுரி பிரசாத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்ப வல்லுநா்கள் கலந்து கொண்டு மாணவா்களின் கட்டுரைகளை பாா்வையிட்டு சிறப்புரையாற்றினா்.
நிறைவு விழாவில் சவீதா பல்கலைகழத்தின் வேந்தா் எம்.என்.வீரய்யன், துணைவேந்தா் தீபக்நல்லசாமி ஆகியோா் கலந்துக்கொண்டு மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்பித்த 600 மாணவா்களுக்கு விருதுகள் வழங்கினா்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் மாணவா்கள் கலந்துக்கொண்டு 24,500 ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்பித்தது இளங்கலை பொறியியல் மாணவா்களின் ஆராய்ச்சி கட்டுரை காட்சிகளுக்கான உலகிலேயே மிகப்பெரிய தொழிநுட்ப மாநாடு என்ற அங்கீகாரத்துடன் வோ்ல்ட் ரெக்காா்டு யுனியனில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.