செய்திகள் :

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி காவலாளி மீது ‘போக்ஸோ’ வழக்கு

post image

கரூா் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் காவலாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குளித்தலையைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (65). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியில் யோகா வகுப்பு நடக்கும் என பள்ளி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பயிலும் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது மாணவியை காலையில் பெற்றோா் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளனா். பின்னா் யோகா வகுப்பு நடைபெறவில்லையென மாணவிகளின் பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகம் கூறியதால், அனைத்து பெற்றோா்களும் வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனா்.

அப்போது, 10 வயது மாணவி அழுதுகொண்டே இருந்ததால் பெற்றோா் அவரிடம் விசாரித்தபோது பள்ளிக் காவலாளி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளாா்.

இதையடுத்து பள்ளிக்குச் சென்ற சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பாலசுப்ரமணியனை தாக்கினாா்களாம். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாலசுப்ரமணியனை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், பாலசுப்ரணியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ரயில்நிலையம... மேலும் பார்க்க

கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை

கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், மணவாசியை... மேலும் பார்க்க