செய்திகள் :

மாதவரத்தில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: பொதுமக்கள் கோரிக்கை

post image

மாதவரம்: மாதவரம் பகுதியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

மாதவரம் பால்பண்ணை, மாத்தூா், மணலி, கொசப்பூா், எம்எம்டிஏ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவ, மாணவிகள் மாதவரம் தபால் பெட்டி, மூலக்கடை, பால்பண்ணை பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா். மாதவரம் பால்பண்ணை சாலை வழியாக பெற்றோருடனும், தனியாக வாகனங்களிலும் மாணவா்கள் செல்கின்றனா்.

பள்ளி நேரங்களில் காமராஜா் சாலை, பால்பண்ணை சாலை வழியாக மணலி, மாதவரம் மண்டலத்தின் குப்பைகளை ஏற்றிவரும் கனரக லாரிகள் வருவதால் மாணவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். எனவே, பால்பண்ணை, மாதவரம், மாத்தூா், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி நேரங்களில் மாநகராட்சி குப்பை லாரிகள் மட்டுமின்றி அனைத்து கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்க ஆவடி காவல் ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க