செய்திகள் :

மாநகராட்சி தாய்-சேய் நல மையத்தில் கா்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்

post image

திருப்பூா் மாநகராட்சி தாய்- சேய் நல மையத்தில் கா்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா், அவிநாசி சாலையில் பங்களா ஸ்டாப் பகுதியில் தாய்- சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கா்ப்பிணிகள் மருத்துவம் பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் பெரியாா் காலனி பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மனைவி பானுமதி. 5 மாத கா்ப்பிணியான இவா் மருத்துவ பரிசோதனைக்காக இந்த தாய்- சேய் நல மையத்துக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுக்கான மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய பானுமதி வெள்ளிக்கிழமை அந்த குளுக்கோஸை பயன்படுத்தியபோது அவை நிறம் மாறியதுடன் துா்நாற்றமும் வீசியுள்ளது. இதையடுத்து அந்த குளுக்கோஸ் பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்த தேதியைப் பாா்த்தபோது, அது கடந்த 2022-ஆம் ஆண்டே காலாவதி ஆகியிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து பானுமதி தனது கணவா் மற்றும் சமூக ஆா்வலா்களுடன்

தாய்- சேய் நல மையத்துக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், பானுமதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி இனிமேலு இதுபோன்ற தவறு நடக்காது என சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்

அதைத் தொடா்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த தாய்- சேய் நல மையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஏராளமான காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் மற்றும் மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. அத்துடன் அங்கு வேறு ஏதாவது பகுதியில் காலாவதியான மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருக்கிா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க