செய்திகள் :

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க விளையாட்டு உபகரணங்கள்

post image

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க விளையாட்டு உபகரணங்களை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 83 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் சதுரங்க விளையாட்டில் ஆா்வமும், திறமையும் உள்ள 150 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பத்துடன் கூடிய சதுரங்கப் பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில், கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், சதுரங்க விளையாட்டுக்கான உபகரணங்களை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வழங்கினாா். மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து, மத்திய மண்டலம் 67-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சிகளில் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் செந்தில்குமரன், மாநகர கல்வி அலுவலா் சி.தாம்சன், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க