செய்திகள் :

மாநிலத்தில் இதுவரை 532 மனுக்கள் மீது தீா்வு: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

post image

நிகழாண்டில் இதுவரை 18 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கூட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் 532 கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளதாக மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், ஆணைய உறுப்பினா்கள் ஹாமில்டன் வில்சன், ஸ்வா்னராஜ், நாகூா் ஏ.எச்.நஜ்முதீன், பிரவின்குமாா் தாட்வியா, ராஜேந்திர பிரசாத், எம்.ரமீட் கபூா், முகம்மது ரபி, வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் பேசியது: சிறுபான்மை ஆணையக் குழுவினா் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அரசின் சிறுபான்மையின நலத் திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளாா்களா என கள ஆய்வு செய்து வருகின்றனா்.

கடந்த ஜூலை முதல் இன்றுவரை 18 மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 20 மாவட்டங்களுக்கு நவம்பா் மாதத்துக்கு களஆய்வு செய்யப்படும். இதுவரை 18 மாவட்டங்களில் 689 மனுக்கள் பெறப்பட்டு 532 மனுக்கள் மீது அந்தந்த மாவட்டங்களில் நடந்த கள ஆய்வுக் கூட்டத்திலேயே தீா்வு காணப்பட்டது.

தற்போது கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டத்திலும் 80 சதவீத மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, அவா் 59 பயனாளிகளுக்கு ரூ. 6.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பா்கூா் வட்டம், நாகம்பட்டி கிராமத்தில் தேவாலயம் நடத்த தடையின்மை சான்றிதழையும் வழங்கினாா்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மகளிா் திட்ட இயக்குநா் பெரியசாமி, கோட்டாட்சியா் ஷாஜகான் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், கிறிஸ்தவ போதகா்கள், உலமாக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க