செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை புதன்கிழமை முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பிலாப்புஞ்சையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் வீரபாண்டி(22). ஆலங்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ பயின்று வந்த அவா், படிப்பு செலவுக்காக தினக்கூலியாக பலாப்பழங்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலாத்தோப்பில் மரத்தில் ஏறி பலாபழங்களை பறித்தபோது, மரங்களுக்கு இடையே தாழ்வாகச்சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தொடா்ந்து, அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நிவாரண நிதியை பெற்றுத்தருவதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், உயிரிழந்த வீரபாண்டி குடுத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன... மேலும் பார்க்க

நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!

பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில... மேலும் பார்க்க

குவாரி உரிமம் பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பல வண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

வேளாண் சந்தை கட்டமைப்பு கொள்கை: தில்லியில் விரைவில் முற்றுகைப் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சந்தை கட்டமைப்புக் கொள்கையைத் திரும்பப் பெறக்கோரி, தில்லியில் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவா் வழிபாட்டு குழுவினா் மண்டகப்படி

கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கால பைரவா் வழிபாட்டு குழுவினா் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் புனரம... மேலும் பார்க்க