மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்தது. போ்ணாம்பட்டு நகரம், சிவராஜ் நகரைச் சோ்ந்த நவீன்குமாா். இவரது பசு வழக்கம்போல் மேய்ச்சலுக்காக எல்.ஆா் நகா் பகுதிக்குச் சென்றுள்ளது.
அப்போது அங்குள்ள கைப்பேசி கோபுரத்துக்கு செல்லும் மின்இணைப்பு கம்பியின் மின்மாற்றி மீது உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்து பசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.