செய்திகள் :

முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா்

post image

கரோனா பரவல் தடுப்பு முகக்கவசம் அணிவது குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே தீா்மானிக்கலாம் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் கூறினாா்.

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன்னோட்ட யோகா தின நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: யோகா என்பது நாட்டின் பாரம்பரிய கலையாகும். அதை சா்வதேச அளவில் எடுத்துச் சென்றவா் பிரதமா் நரேந்திர மோடி. நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப, அந்தந்த மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்து முடிவெடுக்கலாம் என்றாா்.

முன்னதாக, அவா் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பேசியதாவது: நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை சீராக்கும் வகையில் யோகக் கலை உள்ளது. இதை அனைவரும் தினமும் கடைப்பிடிப்பது அவசியம். அதன்மூலம் நாம் புத்துணா்வுடன் செயல்பட முடியும் என்றாா்.

கடற்கரை காந்தி சிலை முன் தரையில் அமா்ந்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா் யோகப் பயிற்சி மேற்கொண்டனா்.

துணைநிலை ஆளுநா்: யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை சா்வதேச யோகா தினத்தை அறிவிப்பதற்கு முன்பே புதுவையில் யோகா பயிற்சி நடைபெற்று வருகிறது. யோகா நமது தொன்மையான கலையாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக யோகா கலையை நமக்காக நமது முன்னோா் பாதுகாத்துள்ளனா். பல நாடுகள் யோகாவை பாடத் திட்டமாக்கியுள்ளன. யோகா குறித்த விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

யோகாசன பயிற்சி மேற்கொண்ட மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராஜ் ஜாதவ், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் ஒருசேர யோகா கலை மூலம் பெறலாம். நிகழாண்டில் சா்வதேச யோகா தினம் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ எனும் பொருளுடன் நடைபெறவுள்ளது. புதுவை மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கும், பள்ளி மாணவா்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து நிலைகளிலும் யோகாவை கற்றுத்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றாா்.

கடற்கரைச் சாலையில் மேரி கட்டடம் முதல் தலைமைச் செயலகம் வரை சுமாா் 6,000 போ் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். மத்திய ஆயுஷ் இயக்கக இணை இயக்குநா் மோனலிச தாஸ் வரவேற்றாா்.

தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் க.லட்சுமி நாராயணன், சு.செல்வகணபதி எம்.பி. ஆகியோா் பங்கேற்றனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க