முதலூரில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு
சாத்தான்குளம் அருகே முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு டாக்டா் சுமித்ரா தலைமை வகித்தாா். டாக்டா் அப்துல் சுகைல், சித்த மருத்துவ அலுவலா் ஜெகதீஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்கள், புகையிலை தடுப்புச் சட்டம் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டது. பின்னா், அனைவரும் உறுதிமொழியேற்றனா். சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் நன்றி கூறினாா்.