செய்திகள் :

முதலை தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையில் முதலை தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் குடும்பத்துக்கு செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினாா்.

செங்கத்தை அடுத்த சாத்தனூா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியான பெரிய வேடியப்பன் கோயில் அருகில் அதே கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரான முனீஸ் (18) அண்மையில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, முகம் கழுவ ஆற்றில் இறங்கிய அவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் உயிரிழந்தாா். இது தொடா்பாக செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், உயிரிழந்த கல்லூரி முனீஸ் வீட்டுக்கு செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி வெள்ளிக்கிழமை நேரில் சென்று அவரது தந்தை கண்ணன், தாய் வேண்டா மணி ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா்.

மகனை இழந்து வாடும் அவா்களுக்கு அரசு சாா்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அப்போது எம்எல்ஏ உறுதியளித்தாா். திமுக தண்டராம்பட்டு மத்திய ஒன்றியச் செயலா் ரமேஷ், சாத்தனூா் அணை நீா்ப்பாசன திட்டக்குழுத் தலைவா் சி.ஜெயராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலை... மேலும் பார்க்க

பள்ளிகளில் நவராத்திரி கொலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செய... மேலும் பார்க்க

எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் ஊராட்சி, புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க