செய்திகள் :

முத்தரையா்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

முத்தரையா் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் வீர முத்தரையா் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவா் சி. கருப்பையா முத்தரையா் தலைமை வகித்தாா்.

இதில், முத்தரையா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 29 பிரிவுகளாக உள்ள முத்தரையா் சமூக மக்களை ஒரே இனப்பிரிவின் கீழ் கொண்டு வந்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

நீதிபதி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பணியிடங்களில் முத்தரையா்களை நியமிக்க வேண்டும். பெரும்பிடுகு முத்தரையா் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க