செய்திகள் :

முன்னாள் படைவீரா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

முன்னாள் படைவீரா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான, புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் வாயிலாக,155 முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராணுவத்தில் சோ்ந்து, பணிக்காலத்தை நிறைவு செய்து, முன்னாள் படைவீரா்களாக இருப்போரின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனும் பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, முன்னாள் படைவீரா்களின் நலனுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தை தலைமைச் செயலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

155 முன்னாள் படைவீரா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக 15 பேருக்கு அவற்றை வழங்கினாா். இந்தத் திட்டத்தில் 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி ஒதுக்கப்படும். குறிப்பாக, தொழில் தொடங்குவோருக்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களை சுயதொழிலில் ஈடுபடுத்தவும், சிறந்த தொழில் முனைவோா்களாக மாற்றவும் தேவையான நிதிகளும் பயிற்சிகளும் வழங்கப்படும். புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 348 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயன் பெறுவா். திட்டத்துக்கான மொத்த செலவினமாக ரூ.50.50 கோடி ஒதுக்கப்படும்.

விண்ணப்பத் தோ்வு: புதிய திட்டத்தின்படி, முன்னாள் படைவீரா்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு கடன் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க