செய்திகள் :

‘மூத்த குடிமக்களுக்கு புத்தகங்கள்தான் சிறந்த நண்பன்’

post image

மூத்த குடிமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்குவது புத்தகங்கள்தான் என கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மயிலாப்பூா் நுண்கலை மன்றம் சாா்பில் 21-ஆவது ஆண்டு நாடக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மயிலாப்பூா் நுண்கலை மன்றத் தலைவரும், தொழிலதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்து பேசியதாவது:

மயிலாப்பூா் நுண்கலை மன்றத்தின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடக விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வின்போது, 5 நாள்கள் நாடகங்கள் நடைபெறும். முதல் நாளில் சிறந்த கலைஞா்களை கெளரவித்து வருகிறாா்கள்.

அந்த வரிசையில், நிகழாண்டு சிறந்த எழுத்தாளா், திரைப்பட இயக்குநா் உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்ட டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு, ‘நாடக கலா நிபுணா’ வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு நாடக கலா நிபுணா என்ற விருதை வழங்கிப் பேசியதாவது:

எழுத்தாளா் டி.வி.ராதாகிருஷ்ணன், தனது படைப்புகளின் வாயிலாக மூத்த குடிமக்களுக்கு புத்தக வடிவில் சிறந்த நண்பனாக இருந்து வருகிறாா் என்றாா்.

முன்னதாக, எழுத்தாளா் டி.வி.ராதாகிருஷ்ணனுக்கு, ‘நாடக கலா நிபுணா’ என்ற விருதும், ரூ.25,000-க்கான காசோலை, 1 பவுன் தங்க நாணயம் வழங்கி கெளரவித்தனா். விழாவில் செய்தி வாசிப்பாளரும், நாடக கலைஞருமான வரதராஜன், பாத்திமா பாபு, நாடகக் கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க