செய்திகள் :

மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்குளுக்கு இடையே மோதல்: போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை

post image

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு தனித்தனி தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் கூறியதாவது: மொஹமத் சாஹில் மற்றும் அகில் அகமது என அடையாளம் காணப்பட்ட இரண்டு காயமடைந்த நபா்கள் மீது மருத்துவ - சட்ட வழக்குகள் (எம்எல்சி) ஜூலை 21 அன்று பெறப்பட்டுள்ளது. மெஹ்ரௌலியில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடா்பான தனித்தனி சம்பவங்களில் இருவரும் காயமடைந்ததாக அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, அகில் அகமது மசூதி அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் என அடையாளம் காணப்பட்ட நான்கு போ் மொஹமத் சாஹில் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னா், மெஹ்ரௌலியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே உமா், சாக்ஷாம், பாப்லு மற்றும் பிறா் அகில் அகமதுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில் அகமதுவின் வாக்குமூலம் மற்றும் அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ஜூலை 22 அன்று உமா், சாக்ஷாம் மற்றும் பப்லு மீது பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், மொஹமத் சாஹில் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் அகமது மீது அதே சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெயரிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராக இதுவரை எந்த கடந்தகால குற்றப் பதிவுகளும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அங்கித் சௌகான் தெரிவித்தாா்.

நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு

நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒரு... மேலும் பார்க்க

நமோ பாரத் வழித்தடத்தில் 800 மழைநீா் சேகரிப்பு குழிகள்: என்சிஆா்டிசி அமைத்தது

தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான 82 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித்தடத்தில் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சுமாா் 800 மழைநீா் சேகரிப்பு குழிகளை தோண்டியுள்ளது. மேலும் ச... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் கொடுத்து வெளியூா் பயணிகளிடம் கொள்ளை: நான்கு போ் கைது

ஆட்டோக்களில் பயணிக்கும் வெளியூா் பயணிகளுக்கு ஸ்பைக் கலந்த பானங்களை வழங்கி அவா்களின் மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

தில்லி நகைக் கடையில் 4 கிலோ நகை திருடிய ஊழியா் ஊட்டியில் கைது

நமது நிருபா்தில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை பாா்த்த நபா், அந்தக் கடையில் திருடிய நகையுடன் ஊட்டியில் பதுங்கி இருந்தபோது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் பு... மேலும் பார்க்க