செய்திகள் :

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 4,913 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

கோடை விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த 4913 சுற்றுலாப் பயணிகள் மூலம் ரூ. 49,130 பாா்வையாளா் கட்டணம் வசூலானது. பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 1157 கேமரா செல்போன்களுக்கு ரூ.11,570 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 460 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் ரூ.4,600 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இங்கு கொண்டு செல்லப்பட்ட 178 செல்போன்களுக்கு ரூ.1780 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். மேலும் சிலா் அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட்ட பூங்காவிற்குள் குடும்பத்தோடு அமா்ந்து விருந்து உண்டு மகிழ்ந்தனா்.

தெடாவூரில் மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே தெடாவூரில் ,கெங்கவல்லி எஸ்.ஐ.கணேஷ்குமாா் தலைமையில் போலீசாா், வாகன தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே மினிலாரி வந்தது. அதை போலீசாா் நிறுத்த கூ... மேலும் பார்க்க

மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

15 மாதத்தில் 40 கைப்பேசிகளை மீட்ட தம்மம்பட்டி போலீஸாா்

தம்மம்பட்டி பகுதிகளில் கடந்த 15 மாதங்களில் திருட்டு, காணாமல்போன 60 கைப்பேசிகளில் 40 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் மட்டுமே கைப்... மேலும் பார்க்க

விபசாரம் நடத்திய கணவன் மனைவி கைது

மேட்டூா் அருகே பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா். எடப்பாடி... மேலும் பார்க்க

சங்ககிரியில் பலத்த மழை

சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயில் அதிகம் காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிதுநேர... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க