செய்திகள் :

மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும்: விமான நிலைய அதிகாரிகள்

post image

சென்னை: மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 மாா்ச் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2015-இல் 2.2. கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2025-இல் 3.5 கோடியை நெருங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டப் பணிகள் ரூ.1,260 கோடியில், 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ஆம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

தொடா்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து 2-ஆம் கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகளையும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளைக் கையாள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவா் விபின்குமாா் தலைமையிலான உயரதிகாரிகள் குழுவினா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு, 2026 மாா்ச் மாதத்துக்குள் மேம்படுத்தப்பட்ட விமான முனையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையும் படிக்க | அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி! 40 குழந்தைகளின் கதி என்ன?

Airport officials said that the upgraded Chennai Airport will become operational in March 2026.

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு: உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் ... மேலும் பார்க்க

கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு

தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்ச... மேலும் பார்க்க

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவினரை நியமிக்க முயற்சி: அதிமுக வழக்கு

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரவினரை நியமிக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலா்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

நிதித் துறை செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மன்னாா்குடியைச் சோ்ந்த அன்பா... மேலும் பார்க்க

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து: வண... மேலும் பார்க்க