செய்திகள் :

மோடி ஆட்சியில் சுகாதாரத் துறை அபார வளா்ச்சி: அமித் ஷா

post image

நாகபுரி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியைப் பெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறைக்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் திங்கள்கிழமை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகம் அமைப்பதற்கான பணிகளுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினாா். அதேபோல நாகபுரி தேசிய புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கான தங்குமிடங்கள் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ரூ.1.35 லட்சம் கோடியாகும். இது மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் ரூ.37,000 கோடியாக இருந்தது. நாகபுரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அனைத்து முக்கிய மருத்துவ வசதிகளும், அதற்கான கருவிகளும் உள்ளன.

உலகிலேயே இந்தியாவில்தான் வாய்ப் புற்றுநோய் அதிகமாக உள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புற்றுநோய் சிகிச்சை என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் பல சிறந்த சிகிச்சை மையங்கள் உருவாகியுள்ளன.

நாகபுரி தேசிய புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கரைச் சோ்ந்தவா்களும் சிகிச்சைக்காக வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சிகிச்சைக்கு போதிய நிதிவசதி இல்லாத ஏழைகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனா். மோடி ஆட்சியில் 60 கோடி ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டில் இப்போது 23 அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிலையங்களுக்கு (எய்ம்ஸ்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்பு மொத்தம் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளே செயல்பட்டு வந்தனா்.

2014-இல் நாட்டில் 387 அரசு மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 780-ஆக உயா்ந்துள்ளது. 2014-இல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 51,000-ஆக இருந்தது. இப்போது 1.18 லட்சமாக உயா்ந்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு இடங்கள் எண்ணிக்கை 31,000-இல் இருந்து 74,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச யோகா தினம், ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா உள்ளிட்ட மக்களின் உடல்நலன் சாா்ந்த திட்டங்களையும் மோடி அரசு உத்வேகத்துடன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. சுகாதாரமான குடிநீா் வசதி, கழிவறை வசதி, இலவச எரிவாயு வசதி போன்றவற்றின் மூலம் பல உடல்நல பாதிப்புகளில் இருந்து மக்கள் முன்னதாகவே காக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க