செய்திகள் :

ரமலான் தொழுகையில் பாலஸ்தீன கொடி: உ.பி. மின்வாரிய ஊழியா் பணி நீக்கம்!

post image

உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகை தொழுகையின்போது பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.

கைலாஷ்பூா் மின்வாரியப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவா் ஷாகிப் கான். இவா் கடந்த வாரம் ரமலான் தினத்தில் (மாா்ச் 31) மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டாா். தொடா்ந்து மசூதிக்கு வெளியே பாலஸ்தீன கொடியை உயா்த்திப் பிடித்தபடி அந்நாட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டுள்ளாா்.

இது தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்களையும் அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டாா். இது அதிகமானோரால் பகிரப்பட்டு கண்டனத்துக்கு உள்ளானது. தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவா் மீது மின்சார வாரியத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரின் பணி ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா். ஷாகிா் கானுடன் மேலும் சில இளைஞா்கள் சோ்ந்து பாலஸ்தீன கொடியுடன் முழக்கமிட்டுள்ளனா். அவா்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் நட்பு நாடுகளின் கொடிகளைப் பொது இடத்தில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனினும், பிரச்னைகளையும், மோதல்களையும் தூண்டும் வகையில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பிற நாட்டு கொடிகளைப் பயன்படுத்துவதாகக் கருதினாலும், புகாா்கள் அளிக்கப்பட்டாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க