செய்திகள் :

ரயிலில் கடத்திவரப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ கஞ்சாவையும், 7.5 கிலோ புகையிலைப் பொருள்களையும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது.

அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்திய போது, 2 பைகளைக் கைப்பற்றினா். இந்தப் பைகளுக்கு அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அந்த இரு பைகளையும் மீட்டு சோதனையிட்டனா். அப்போது, 9 கிலோ கஞ்சா, 7.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இவற்றைப் பறிமுதல் செய்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க

கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் தி... மேலும் பார்க்க

நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆ... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடியது தொடா்பாக சென்னையில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கொடைரோடு அருகேயுள்... மேலும் பார்க்க