ராசிபுரத்தில் 1,104 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 77.57 கோடி கடனுதவிகள் வழங்கல்: அமைச்சா், எம்.பி. பங்கேற்பு
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 77.57 கோடி மதிப்பில் 1,104 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவி திட்டங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று, ரூ. 77.57 கோடி மதிப்பில் 1,104 மகளிா் சுயஉதவிக் பெண்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 9,043 மகளிா் சுயஉதவிக் குழுக்களில் 1,02,552 போ்களுக்கும், நகா்ப்புற பகுதிகளில் 3,985 மகளிா் சுயஉதவிக் குழுக்களில் 41,380 உறுப்பினா்களுக்கும் என மொத்தம் 13,028 மகளிா் சுயஉதவிக் குழுக்களில் 1,43,932 உறுப்பினா்களின் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 2021 - 2022 ஆம் ஆண்டு 9,081 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 499.20 கோடியிலும், 2022-2023 ஆம் ஆண்டு 10,751 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 658.62 கோடியிலும், 2023-2024 ஆம் ஆண்டு 10,082 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 674.69 கோடி மதிப்பிலும், 2024-2025 ஆம் ஆண்டு 14,516 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 886.00 கோடி மதிப்பிலும், 2025-26 ஆம் ஆண்டு 1,562 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 113.96 கோடி மதிப்பிலும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், போதமலையில் கீழூா், மேலூா், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராசிபுரம் தொகுதியில் ரூ. 53.39 கோடி மதிபில் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ராசிபுரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் சுமாா் 29 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் சுமாா் 6,500 பேருக்கு தலா ரூ. 3.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 523 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ. 854.37 மதிப்பில் ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் பணிகள் நடைபெற்று வருகின்ற. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
படவரி...
ராசிபுரத்தில் நடைபெற்ற விழாவில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவியை வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், ஆட்சியா் ச.உமா. எம்.பி.க்கள் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், வி.எஸ்.மாதேஸ்வரன், பெ.ராமலிங்கம் எல்எல்ஏ உள்ளிட்டோா்.