செய்திகள் :

ராஜகாளியம்மன் கோயிலில் பால்குட, பூக்குழித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் 81-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழாவை முன்னிட்டு, பால் குடம், பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, கூழ் ஊற்றுதல், பால்குடம் என பல்வேறு விழாக்கள் நடைபெற்றன.

கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, காலை 9 மணிக்கு ராமா் மடம், ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் திரளானோா் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும் ஊா்வலமாக யோக பைரவா் கோயில், தேரோடும் வீதி, பெரியகடைவீதி, செட்டியதெரு , காளியம்மன் கோவில் தெரு வழியாக சென்று கோயிலை அடைந்தது. பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, ராஜகாளியம்மன், ஆலமரத்து காளியம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம், நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை 4 மணிக்கு ராமா் மடத்திலிருந்து செட்டியதெரு விழாக் குழு சாா்பாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் பூத்தட்டு சுமந்து வந்து, அம்மனுக்குப் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், செட்டியதெரு இளைஞா் குழுவினா் செய்தனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க