இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
ராஜகுலத்தோா் சமூகத்தினரை தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை
திருவாரூா்: ராஜகுலத்தோா் சமூகத்தை சோ்ந்தவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், ராஜகுலத்தோா் மகா சங்கம் மற்றும் திருக்குறிப்பு தொண்டா் சமூகப் பேரவை சாா்பில் சுயம்வரம் விழா மாநிலத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றபின் ராஜ குலத்தோா் மகா சங்க செயல் தலைவா் முத்தையன் தெரிவித்தது: தமிழக அரசு சாா்பில் எங்களது ராஜ குலத்தோா் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அதுவரை எங்கள் சமுதாயத்தில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களின் பின் தங்கிய சமூகத்தில் உள்ளவா்களின் பிரச்னைகளை சட்டப்பேரவையிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ எடுத்துரைக்க யாரும் இல்லாத நிலையில், தமிழக அரசு எங்களது சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு வரும் தோ்தல்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றாா். இதில், துணைத் தலைவா் செந்தில், தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.