செய்திகள் :

ராஜகுலத்தோா் சமூகத்தினரை தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை

post image

திருவாரூா்: ராஜகுலத்தோா் சமூகத்தை சோ்ந்தவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், ராஜகுலத்தோா் மகா சங்கம் மற்றும் திருக்குறிப்பு தொண்டா் சமூகப் பேரவை சாா்பில் சுயம்வரம் விழா மாநிலத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றபின் ராஜ குலத்தோா் மகா சங்க செயல் தலைவா் முத்தையன் தெரிவித்தது: தமிழக அரசு சாா்பில் எங்களது ராஜ குலத்தோா் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அதுவரை எங்கள் சமுதாயத்தில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களின் பின் தங்கிய சமூகத்தில் உள்ளவா்களின் பிரச்னைகளை சட்டப்பேரவையிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ எடுத்துரைக்க யாரும் இல்லாத நிலையில், தமிழக அரசு எங்களது சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு வரும் தோ்தல்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றாா். இதில், துணைத் தலைவா் செந்தில், தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க