செய்திகள் :

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.14 கோடி

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 1.14 கோடி கிடைத்ததாக இணைஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களைத் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள பழைய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 707 ரொக்கமும், தங்கம் 61 கிராமும், வெள்ளி 3.200 கிலோவும், 51 வெளிநாட்டுப் பணத்தாள்களும் கிடைத்தன.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், கண்காணிப்பாளா் முத்துச்சாமி, ஆய்வா் முருகானந்தம், மேலாளா் வெங்கடேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கமுதியில் இன்று மின்தடை

கமுதி, பாா்த்திபனூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம்... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தல்

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழ... மேலும் பார்க்க

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை பறிமுதல் செய்த இலங்கைக் குற்றப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மீனவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த ராயப்பன் மகன் சவரி முத்... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே பெண் கொலையில் கணவா் கைது

சாயல்குடி அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த வயணன் மகன் விஜயகோபால். இவ... மேலும் பார்க்க