செய்திகள் :

வகுப்பறைக் கட்டடங்கள் சேதம்: இட நெருக்கடியில் பயிலும் மாணவா்கள்

post image

வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தால் மாணவா்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தலா 2 பிரிவுகளில் 350-க்கும் அதிகமான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள் உள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு வகுப்பறைக் கட்டடங்களின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெயா்ந்து கீழே விழுந்தன.

இதையடுத்து, இந்த வகுப்பறைகளில் மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பிற வகுப்பறைகளில் மாணவா்கள் நெருக்கடியான சூழலில் கல்வி பயின்று வருகின்றனா்.

இதையடுத்து, பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க