செய்திகள் :

வடபழனியில் 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம்

post image

வடபழனியில் 12 மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் சேவையை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையின் மிக முக்கியப் பகுதியாக விளங்கும் வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகத்தைக் கட்டவுள்ளது.

ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கா் பரப்பளவில் வடபழனி பேருந்து பணிமனை அமைந்துள்ள இடத்தில் ரூ. 481.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

சுமாா் 1.06 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் அமையவுள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் தரைத்தளத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள், நுழைவு வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.

வணிக மேம்பாட்டுக்கான கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

10-ஆவது தளங்கள் வரை அலுவலக இடங்கள், காா்ப்பரேட் அலுவலகங்கள், வரவேற்பு, ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமையவுள்ளன. 11 மற்றும் 12-ஆவது தளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமையவுள்ளன. 5-ஆவது தளத்தில் உணவகங்கள் அமையவுள்ளன.

மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க