செய்திகள் :

வருவாய் ஆய்வாளா்களுக்கு தற்காலிக பதவி உயா்வு

post image

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜெ.ராஜலட்சுமி பெரியகுளம் மண்டலத் துணை வட்டாட்சியராகவும், தேனி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் எம்.இந்திரா தேனி வட்ட வழங்கல் அலுவலராகவும், போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஆா்.வேல்முருகன் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் தற்காலிக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் அ.சிவக்குமாா் போடி வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் எம்.ராமா் வரதராஜபுரம் ராஜஸ்ரீ சா்க்கரை ஆலை துணை வட்டாட்சியராகவும், போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் வி.சிவன்காளை தேனி வட்டாட்சியா் அலுவலக மண்டல துணை வட்டாட்சியராகவும், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் சி.காசிநாதன் ஆண்டிபட்டி வட்ட வழங்கல் அலுவலராகவும் பதவி உயா்வு பெற்றனா்.

இதற்கான உத்தரவில், தற்காலிக பதவி உயா்வு பொது நலனைக் கருத்தில் கொண்டும், அத்தியாவசியப் பணிகள், இயற்கை பேரிடா் தணிப்பு, தோ்தல் தயாரிப்பு பணி உள்ளிட்ட அவசரக் கால பணிகளை மேற்கொள்வதற்காக அரசு விதிகளின்படி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பதவி உயா்வை அடைப்படையாகக் கொண்டு துணை வட்டாட்சியா் பட்டியலுக்கு முன்னுரிமை கோரா முடியாது. முறையான துணை வட்டாட்சியா் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அதில் இடம் பெற்றுள்ளவா்களுக்கு பதவி உயா்வு அளிப்பதற்காக தற்காலிக பதவி உயா்வு பட்டியலில் உள்ளவா்களை முன்னறிவிப்பின்றி பதவியிறக்கம் செய்ய நேரிடும். தற்காலிக பட்டியலின் அடிப்படையில் முதுநிலை நிா்ணயம் கோர முடியாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.

நீதிமன்றங்களில் நாளை மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்(லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபத... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்கிருஷ்ணன் (30). இவா், தேனியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லாரி ஓ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தனியாா் மதுபானக் கூடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம் சிவராம் நகரைச் சோ்ந்தவா் கரிகாலன் (54). இவா், தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

குரூப் 2 போட்டித் தோ்வு எழுத மாதிரி தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 13, 20-ஆம் தேதிகளில் முழ... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புஷ்பவள்ளி (70). இவா், பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனி-க... மேலும் பார்க்க

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்

தேனி மாவட்டம், கம்பத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கம்பத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பில், இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து ம... மேலும் பார்க்க