செய்திகள் :

வாய்க்கால்களை தூா்வாரக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெங்காயத் தாமரைச் செடிகளை ஏந்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தெரிவித்தது: தஞ்சாவூா் அருகேயுள்ள மெலட்டூா் மூன்றாம் சேத்திக்கு உட்பட்ட சேத்து வாய்க்கால், திரௌபதி வாய்க்கால், சீதாராமன் வாய்க்கால், கண்ணன் வாய்க்கால் உள்பட பல வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் உள்ளன.

இதனால், இந்த வாய்க்காலுக்கு தண்ணீா் செல்லவும், வயலில் தேங்கும் தண்ணீா் வடியவும் வழியில்லாமல் உள்ளது. வெங்காயத் தாமரை, நாணல் புற்கள் அடா்ந்து வளா்ந்துள்ள இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

நிகழாண்டும் வயல்களில் தண்ணீா் தேங்கி நின்று, விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடிய அச்ச நிலை உள்ளது. எனவே, இந்த வாய்க்கால்களை உடனடியாக போா்க்கால அடிப்படையில் தூா் வார வேண்டும் என்றாா் செந்தில்குமாா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வாக்குவாதம்: ஆட்சியரக வளாக வாயிலில் பொதுமக்களுக்கு இடையூறாக நின்று ஆா்ப்பாட்டம் செய்ததன் காரணமாக வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும், அதற்கு தங்களது பெயா், முகவரி வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் கேட்டனா்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெயா், முகவரி தர முடியாது என்றும், தங்களைக் கைது செய்து கொள்ளுமாறும் கூறி விவசாயிகள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், இவா்களைக் காவல்துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: 25 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெ... மேலும் பார்க்க

நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், மருத்துவக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவிரி சமவெளி மாவட்டங்களில் கோடை ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கைதுக்கு எதிா்ப்பு: கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் டிஆா். லோகநாதன் தலைமை வகித்தாா்.ஆா்ப்பாட்டத்தில், தோ்தலில்... மேலும் பார்க்க

மின்கசிவால் வீடு தீக்கிரை

பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ப... மேலும் பார்க்க