வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வால்பாறை அரசுக் கல்லூரியில் 2025-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. கல்லூரியில் மொத்தமுள்ள 520 இடங்களுக்கு சுமாா் 13,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.