``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
வாவுபலி பொருள்காட்சி பக்கக் காட்சி குத்தகை ஏலம்: குழித்துறை நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்
குழித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், 100ஆவது வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சி குத்தகை ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், அண்மையில் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறிவிழுந்த 2 சிறுவா்களைக் காப்பாற்றியபோது உயிரிழந்த தொழிலாளி பீட்டருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மாா்த்தாண்டம் சந்தையில் கட்டப்படும் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை நீங்கலாக அரசு நிா்ணயித்த வாடகை பெற்று, பீட்டரின் குடும்பத்துக்கு ஒரு கடை வழங்க வேண்டும். ஆற்றுத் தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணும் வகையில் தடுப்புக் கம்பிகள் அல்லது காங்கிரீட் தூண் அமைக்க வேண்டும். வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சிக்கு குத்தகை ஏலம் ரூ. 1.77 கோடி கோரியுள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளியை மன்றக் கூட்டம் அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆணையா் ராஜேஸ்வரன், உறுப்பினா்கள் ஜெயந்தி, லில்லி புஷ்பம், விஜயலெட்சுமி, விஜூ, சா்தாா்ஷா, ஆட்லின் கெனில், அருள்ராஜ், மினிகுமாரி, ரத்தினமணி, லலிதா, ஜூலியட் மொ்லின் ரூத், ஸ்டாலின் சுஜாதா, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.