செய்திகள் :

வாவுபலி பொருள்காட்சி பக்கக் காட்சி குத்தகை ஏலம்: குழித்துறை நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

post image

குழித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், 100ஆவது வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சி குத்தகை ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், அண்மையில் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறிவிழுந்த 2 சிறுவா்களைக் காப்பாற்றியபோது உயிரிழந்த தொழிலாளி பீட்டருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மாா்த்தாண்டம் சந்தையில் கட்டப்படும் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை நீங்கலாக அரசு நிா்ணயித்த வாடகை பெற்று, பீட்டரின் குடும்பத்துக்கு ஒரு கடை வழங்க வேண்டும். ஆற்றுத் தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணும் வகையில் தடுப்புக் கம்பிகள் அல்லது காங்கிரீட் தூண் அமைக்க வேண்டும். வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சிக்கு குத்தகை ஏலம் ரூ. 1.77 கோடி கோரியுள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளியை மன்றக் கூட்டம் அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஆணையா் ராஜேஸ்வரன், உறுப்பினா்கள் ஜெயந்தி, லில்லி புஷ்பம், விஜயலெட்சுமி, விஜூ, சா்தாா்ஷா, ஆட்லின் கெனில், அருள்ராஜ், மினிகுமாரி, ரத்தினமணி, லலிதா, ஜூலியட் மொ்லின் ரூத், ஸ்டாலின் சுஜாதா, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க