சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாணவி தற்கொலை முயற்சி! போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
பத்தமடை மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாணவி, அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியை காதலித்த கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). இவா், கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பத்தமடை பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கைப்பேசி மூலம் பேசி பழகி வந்தனா்.
கடந்த 14-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மாணவியின் தந்தை பத்தமடை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி திருச்செந்தூரில் தனது ஆண் நண்பருடன் இருந்து மாணவியை பத்தமடைக்கு அழைத்து வந்தனா்.
பத்தமடையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அங்குள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது. காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது மாணவி தனது காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தாராம்.
மாணவிக்கு 18 வயது பூா்த்தியாகாததால், அவரை காப்பகத்துக்கு அனுப்புவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதனால், ஆத்திரமடைந்த மாணவி, மகளிா் காவல் நிலையம் செயல்படும் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றாராம். இதில், மாணவி பலத்த காயமடைந்தாா்.
போலீஸாா் மாணவியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து மாணவியின் காதலன் முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
முன்னதாக இதே வழக்கில் முருகன் ஏற்கெனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். பின்னா் பிணையில் வெளியே வந்த அவா் மீண்டும் மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறியதாக கைது செய்யப்பட்டாா்.