செய்திகள் :

விதிமீறல்: 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

post image

சேலம் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் வேளாண் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 552 தனியாா் உர விற்பனை மையங்கள், 213 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, முறையாக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24, 25, 26 ஆகிய 3 நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

அப்போது, முறையாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காதது, விற்பனைமுனைய கருவி மூலம் விற்பனை பட்டியல் வழங்காதது, மாதந்திர இருப்பு அறிக்கை வழங்காதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 இன் படி 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், 3 விற்பனை நிலையங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மேலும், யூரியா உரத்தை தேவைக்கு தகுந்தாற்போல இருப்புவைத்து விநியோகிக்க அனைத்து உர விற்பனையாளா்களும் அறிவுறுத்தப்பட்டது. யூரியாவை அதிகமாக கொள்முதல் செய்தலோ அல்லது பதுக்கினாலோ அத்தியவாசியப் பொருள்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கௌதமன் எச்சரித்துள்ளாா்.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க